ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை விரைவில் நாடாளுமன்றில் சமர்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“பிரதான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் இரண்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஒன்று. இவ் வறிக்கைகளில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையானது எமது நாட்டின் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கையாகும். இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஆளும்கட்சி பிரதம கொரடாவிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

You May also like