சீன-இந்திய மோதலுக்கு ராஜபக்ஷவே காரணம்:மனோ

சீனாவுக்கு முதலிடத்தை வழங்கியமையே இந்தியாவை இலங்கை பகைத்துக்கொள்ள காரணம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர் ஜயர்தன செய்த பிழையையே இன்று ராஜபக்ச அரசாங்கமும் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தின் முனைகளை 2014ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ச வழங்கியதன் காரணமாகவே இன்று இந்தியாவும் கிழக்கு முனையை கோரிவருவதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்விரு நாடுகளையும் இராஜதந்திர ரீதியாக சமாளிக்க தெரியாமல் ராஜபக்ஷ அரசாங்கம் திண்டாட்டமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

You May also like