கோவிட் தடுப்பூசியை நிராகரித்தது JVP

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிஷ்கரிப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு மற்றும் ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பிரிவினர் இருக்கின்ற நிலையில், அவர்களே அதிகமாக தொற்றுக்கு இலக்காகிவருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்கள் அவர்களை விட பெறுமதியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May also like