அரசாங்கத்திற்குள் இருக்கும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
அலரிமாளிகையில் இச்சந்திப்பு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ச அணிக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை பஸிலிடம் அவர்கள் முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கொண்டுசெல்வதை பஸில் ராஜபக்ஷ, பின்வரிசை உறுப்பினர்களிடம் உறுதிசெய்ததாக அலரிமாளிகை வட்டாரங்கள் ஊடுருவிக்குத் தெரிவித்தன.
மேற்படி சந்திப்பில் 40ற்கும் மேற்பட்ட மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் பங்கேற்றிருக்கின்றனர்.