இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்கள் அமெரிக்கா சென்று அந்நாட்டு தேசிய அணியில் இடம்பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அணியில் இருந்த செஹான் ஜயசூரிய அண்மையில் அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில் கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வீரர்களான துஸ்மந்த சமீர, அமில அப்பொன்சூ, தில்ஷான் முணவீர, மலிந்த புஸ்க்ப்குமார, லஹிரு மதுஷங்க ஆகியோரே இவ்வாறு அமெரிக்க அணியில் இணைய உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இலங்கை அணியில் இருந்து கடந்த வாரம் உப்புல் தரங்க விலகியிருந்தார்.
அவரும் மேற்படி அமெரிக்க தேசிய அணியில் இணையவுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.