நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 விமான சேவைகள் மூலம் ஆயிரத்து 736 பேர் பயணநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த பயணநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை வெளிநாடுகளில் நிர்க்குள்ளாகியிருந்த 686 பேர் குறித்த காலப்பகுதியில் 11 விமான சேவைகள் மூலம் நாடுதிரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சவுதி அரேபியாவில் இருந்து 105 பேரும் தோஹா நகரில் இருந்து 70 பேரும் சிங்கப்பூரில் இருந்து 89 பேரும் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
மேலும் குறித்த காலப்பகுதியில் பல்வேறு தேவைகளின் நிமித்தம் ஆயிரத்து 50 இலங்கையர்கள் 16 விமான சேவைகள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது