ரவி கருணாநாயக்க உட்பட 08 பேருக்கு மறியல்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகார வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 08 சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை மூவரடங்கிய நீதியரசர்கள் தலைமையிலான விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.

மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பில், சட்ட மாஅதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்த விசாரணைகள் விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

You May also like