நாட்டில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எஸ்ட்ராஷெனகா தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 6 ஆயிரத்து 449 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருந்த எஸ்ட்ராஷெனகா தடுப்பூசி பயன்பாட்டை மீள ஆரம்பிக்க ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன. குறித்த தடுப்பூசியானது பாதுகாப்பானதும் வினைத்திறன்மிக்கதுமென உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பயன்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.