ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் எந்த வகையிலும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றபோது அதில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.