தோட்ட தொழிலாளர்களுக்கு ஏப்ரல் முதல் 1000 ரூபா-அரசு அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட்சம்பளம் வழங்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான வருண லியனகே நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்து வினவினார்.

மேற்படி கேள்விக்கு பதிலளித்திருக்கும் அமைச்சர், ஏப்ரல் 10ஆம் திகதி தொடக்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு நியமித்தபடி ஆயிரம் ரூபா நாட்சம்பளம் வழங்கப்படும். அவ்வாறு வழங்காத பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்கள் அரசுடைமையாக்கப்படாது. இருப்பினும் நிர்யணிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

You May also like