சீன பாதுகாப்பு அமைச்சர் விரைவில் இலங்கை வருகிறார்!

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், சீனாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் இராஜதந்திரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் இங்கு வரவுள்ளார்.

இதேவேளை சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவுக்கு பயணமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

You May also like