ரமழான் மாதம் இன்று ஆரம்பம்- நோன்பும் தொடங்கியது!

புனித ரமழான் மாதம் இன்று ஆரம்பமாகின்றது.

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அதற்கமைய இன்று புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like