இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக தொழில்பெற்றுச் சென்ற 41 பேர், நீண்டகாலமாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சர்வதேச மன்னிப்புச் சபை இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
சுமார் 18 மாதங்களாக இவர்கள் ரியாத்திலுள்ள தடுப்பு முகாமில் தங்கவை்ககப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 41 பெண்களும் எதற்காக அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
அவர்களிடையே சிறு பிள்ளைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.