இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு இன்று

மறைந்த இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இறுதி கிரியை நிகழ்வுக்கு 30 பேரை மாத்திரம் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளமை காரணமாக சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு இறுதிகிரியைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பக்கிங்ஹேம் அரண்மனை அறிவித்துள்ளது.

இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது கணவரின் இறுதிச் சடங்கில் தனியாக பங்கேற்கவுள்ளார். இளவரசர் பில்ப்பின் தேகத்தை ஏற்றிய பேழையை எடுத்துச்செல்லும் வாகனத்தின் பின்னால் அவரது பிள்ளைகள் செல்லவுள்ளதாக பக்கிங்ஹேம் அரண்மனை அறிவித்துள்ளது.

You May also like