திவுலப்பிட்டியவில் மீண்டும் கொரோனா கொத்தணி!

திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையில் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் முதல் தொடர்பாளர்கள் 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தொழிற்சாலையில் சுமார் 350 பேர் பணியாற்றுகின்றனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May also like