எட்டியாந்தோட்டை LOCKDOWN

கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவிற்குட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கராகொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 26ம் திகதி 86 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், 60 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்தே, குறித்த இரு பகுதிகளும் தனிமைப்படுத்த, எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You May also like