கேஸ் பாவனையாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!

நாடு முழுவதிலும் தற்போது 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேஸ் விலையேற்றத்திற்கு அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தன.

எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், வழமையாக வீட்டுப்பாவனைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் 12.5 கிலோ கிராம் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நிறைகொண்ட சிலிண்டர்களுக்குப் பதிலாக 16 லீட்டர் கொண்ட சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

 

You May also like