நடுவீதியில் சிகரட் குடித்த இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நிரோசன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் மீள இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன.

அதனிடையே இவ்விருவரும் நடுஇராத்திரியில் வீதிக்கு வந்து சிகரட் அருந்தும் காணொளி பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது.

இதனையடுத்தே இலங்கை கிரிக்கெட் சபையினால் இவ்விருவரும் அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

You May also like