நாடு முழுவதிலும் டெல்டா அச்சறுத்தல்?

நாட்டில் டெல்டா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரான டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், தற்போது உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த எந்த விதத்திலும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

இதுவரை 05 பேருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அதுபரவாமலிருக்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

You May also like