எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து உதய கம்மன்பிலவை நீக்குவதற்கான தீர்மானம் ஜனாதிபதியினால் எட்டப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
பெரும்பாலும் அவருக்கு இன்னுமொரு அமைச்சு இந்த மாதத்திற்குள் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் எரிபொருள் விலையேற்றத்தை மேற்கொண்ட காரணத்திற்காக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்ப்பலைகள் ஏற்பட்டன.
இதனிடையே அவருக்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை காரணத்திற்கொண்டே அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பிறிதொரு அமைச்சை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக Tamil.truenews.lk இணையத்தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.