விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்னறர்.
பதுளை – போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் அவர்கள் சரணடைந்ததன் பின்னர் இன்று காலை கைதாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களுடன் சரணடைந்த மேலும் ஐவர் உட்பட சந்தேகநபர்களை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.