பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகின்றது.
அத்துடன், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.