பலங்கொடையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்

இரத்தினபுரி – பலங்கொடை தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை பகல் தப்பிச்சென்றுள்ளார்.

அவிசாவளை – கொஸ்ஹேன்கம, ஹேவாயின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நந்தசிறி போவத்த என்ற 72 வயது நபரே இவ்வாறு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு உரித்தான சிங்கராஜ இடையே இருந்தபோது கோவிட் தொற்று உறுதியாகியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

You May also like