மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதான 03 கத்தோலிக்க தேவாலயங்கள் மீது இன்று புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
திட்டமிட்டவகையில் இன்று அதிகாலை இந்த தாக்கதல்கள் அரங்கேற்றப்பட்டிருப்பதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடு உடைந்து சேதமாகி உள்ளது.