அடுத்த மாதத்திலிருந்து இலங்கையில் மாடறுக்கத் தடை?

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் மாடு அறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வரப் போவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான சட்டவரைபு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த யோசனை அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் அதற்கான வரைபும் தயாரிக்கப்பட்டு தற்சமயம் நிறைவு நிலையை அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்னும் இரண்டே வாரங்களில் அந்த வரைபு நாடாளுமன்றத்திலும் சமர்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சட்டமாக்கப்படும்.

அதன் பின் இலங்கையில் மாடுகளை இறைச்சிகாக அறுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like