சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
டாக்டர் ஹேமந்த ஹேரத், கோவிட் ஒழிப்பு இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்கனவே பெற்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.