எரிபொருள் விலையேற்றம் மற்றும் குறைப்பு குறித்து நிதியமைச்சர் மிகவிரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது தெரிவித்தார்.
தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமைக்கு மத்தியில்தான் எரிபொருள் விலையேற்றத்தை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.