16 வயது தங்களது மகளைக் காணவில்லை என்று கொழும்பின் புறநகராகிய கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாணவி நேற்று பிற்பகல் 1.30 அளவில் வீட்டிலிருந்து வெளியே வந்து ஆடைகளை உலரவிடுவதற்காக சென்றுள்ளார். எனினும் அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை என்று சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடத்தில் தெரிவித்துள்ளனர்.