அனைத்து மாகாண ஆளுநர்களையும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அழைத்து நேற்று அவசர கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
ஆளுநர்கள் மட்டுமன்றி மாகாண முதலமைச்சர்கள், செயலாளர்கள், மாவட்ட மேற்பார்வைக் குழு உள்ளிட்ட பிரதிநிதிகளையும் அவர் அழைத்திருக்கின்றார்.
அலரிமாளிகையில் நடந்த இந்த சந்திப்பில் கோவிட் தடுப்பூசிப் பணிகள் பற்றியே அதிகம் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தடுப்பூசியேற்றல் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் இச்சந்திப்பில் கூறியுள்ளார்.