இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்த போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று வியாழக்கிழமை அவர்கள் இலங்கை கிரிக்கெட் சபையில் ஆஜராகவுள்ளனர்.
தற்சமயம் இவர்கள் தற்காலிகத் தடையை எதிர்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.