கொழும்பு துறைமுகத்திற்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலப்பரப்பை தனியார் நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் வழங்கப் போவதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான நிரோஷன் கொரகானகே, குறித்த திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.