அமெரிக்கா, லண்டனுக்கு செப்டம்பரில் பயணிக்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக பிரித்தானியாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி, அங்கு நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

அதன் பின் அமெரிக்கா செல்கின்ற ஜனாதிபதி, அங்கு நடைபெறவுள்ள ஐ.நா அமர்விலும் பங்கேற்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவுக்கான விஜயத்தினிடையே ஜனாதிபதி, தனது மகன் குடும்பத்திற்குப் பிறந்துள்ள மகளைப் பார்க்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May also like