முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் முதற்தடவையாக இன்றுபகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், அவர்மீதான விசாரணைகள் மற்றும் வழக்கு முடியும்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
அதன்படி வருகின்ற 18ஆம் திகதி வரை ரிஷாட்டிற்கு மறியல் உத்தரவளிக்கப்பட்டிருக்கிறது.