மாகாண எல்லையில் முப்படை களத்தில்!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

பொலிஸாரின் ஒத்துழைப்புக்கு முப்படையினர் தேவை என கருதப்படும் இடங்களில் முப்படையினர் நேற்று முதல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமைக்கு மத்தியில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

You May also like