நாட்டில் இன்று முதல் முகக் கவசம் இன்றி எவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவ்வாறு வெளியேறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று இதற்கு முன்னர் இருந்ததை விட மிகவேகமாகப் பரவுவதால் மக்களும் அதற்கு ஏற்றாற்போல பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.