30ஆம் திகதி ஊரடங்கு நீக்கம்? அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை

தற்போது நாடு முழுவதிலும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் என்று தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.

நாட்டை முழுமையாக மூடிவைத்து கோவிட் தொற்றை கட்டுப்படுத்திவிட முடியாதென்கின்ற நிலைப்பாட்டில் உலக நாடுகள் இருப்பதாகவும், அதனையே தாங்களும் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்த 20ஆம் திகித முதல் வருகின்ற 30ஆம் திகதி அமுலில் உள்ள போதிலும், கொழும்பு நகரில் வழமைபோல சில இடங்களில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் சிறிய கடைகள் முதல் பல்வேறு வணிக நிலையங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்ற வகையிலான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

You May also like