கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சர் பற்றிய தகவலுடன் சேர்த்து மற்றுமொரு தகவலும் வெளியாகியுள்ளது.
அண்மையில் உலக திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த புஷ்பிக்கா மற்றும் கரொலின் ஆகிய இருவரில் ஒருவர் அமைச்சருடன் வெலிக்கடை சிறைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றார்.
இரண்டு தடவைகள் அமைச்சரின் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்திருப்பதாக கூறப்படுகின்றது.