கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் 02 நோயாளர்களும், திருகோணமலை வைத்தியசாலையில் 02 நோயாளர்களும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 நோயாளர்களும், கராப்பிட்டிய வைத்தியசாலையிலும், களுபோவில வைத்தியசாலையிலும் தலா ஒரு நோயாளர்கள் என இதுவரை பதிவாகியிருக்கின்றனர்.
மருத்துவ ஆய்வுப் பணியகத்தின் விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் பிரிமாலி ஜயசேக இதனை இன்று தெரிவித்தார்.