பிரித்தானியாவின் கோவிட் சிவப்பு நாடுகளின் அட்டவணையிலிருந்து இலங்கை பச்சை அட்டவணைக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய, இலங்கை, பாகிஸ்தான், துருக்கி உட்பட 12 நாடுகள் இவ்வாறு பச்சைப் பட்டியலில் சேர்க்கப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இறுதியறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.