CID விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சஜித் அணி எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி மூலமாக குற்றங்களைத் தடுக்கின்ற பிரிவில் ஆஜராகும்படியே அழைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அதற்கமைய நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 09 மணிக்கு அவருக்கான விசாரணை நேரம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

You May also like