ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசாங்கத்திற்கு 1500 கோடி ரூபா நாட்டம் ஏற்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் M.J. குணசிறி தெரிவித்துள்ளார்.
அதனால் மதுபான விற்பனைக்கு ஒன்லைன் முறையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் காரணமாக சாதாரண விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒருசில மது போத்தல்கள் இன்று பன்மடங்கு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.