அடையாள அட்டை அச்சிடும் அதிகாரம் இனி இந்தியாவிடம்?

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிலுள்ள மோசடி நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.

அதேபோல், மலேஷியாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டிலுள்ள அனைத்து அரச சொத்துக்களையும் அரசாங்கம் இவ்வாறு சூட்சுமமான முறையில் விற்பனை செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

You May also like