எந்த நேரத்திலும் மற்றுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரிடம் விசாரணை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸார் அவரிடம் மேலதிக தகவல்கள் பெறுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அகத் அல்விஸ் தெரிவித்தார்.