ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
அமெரிக்கா சென்று நேற்று ஜனாதிபதி நாடு திரும்பிய நிலையில் நடக்கும் முதல் அமைச்சரவை சந்திப்பு இதுவாகும்.
அந்த வகையில் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரை ஜனாதிபதி சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பு தொடர்பான தகவல்களை ஜனாதிபதி இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்துவார் என கூறப்படுகிறது.
இதேவேளை இன்று அமைச்சரவை சந்திப்புக்கு வரும் அதனை அமைச்சர்களும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.