இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனப் பங்குகளை ஐந்தாக பிரித்து தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசிம் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வரைவு நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை அரசாங்கம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.