சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணத்தில் சிக்கியுள்ள தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இன்று இரண்டு மணிநேர விசாரணைகளை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடத்தியிருக்கிறது.
குறித்த ஆணைக்குழவின் அழைப்பின் பேரில் அவர் இன்று முற்பகல் 11 மணியளவில் அவர் ஆஜராகினார்.
இந்நிலையில் 02 மணிநேர விசாரணையின் பின்னர் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.
ஏற்கனவே அவரிடம் கடந்த வாரம் மூன்று மணிநேர விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.