இலங்கையில் கேஸ் விலை உயர்வடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படும் நிலையங்களில் அதற்கான கட்டணங்களும் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரைக் காலமும் 8000 ரூபா ஒரு சில பிரதேச சபை மற்றும் நகர சபைகளால் அறவிடப்பட்டு வந்தன.
எனினும் விலை அதிகரித்த பின் தற்சமயம் 10000 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேறு சில பிரதேசங்களில் 9000 ரூபாவாக இருந்த இந்த கட்டணம், தற்சமயம் 11000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.