24ஆம் திகதி ஆளுங்கட்சியை அழைத்தார் கோட்டா-சிலர் அதிருப்தியில்

ஆளுங்கட்சியிலுள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 24ஆம் திகதி சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியினால் அனைத்து உறுப்பினர்களுக்கும் விசேட இராவிருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வது பற்றி கொழும்புக்கு வெளியே உள்ள உறுப்பினர்களும் அமைச்சர்களும் பலமுறை சிந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.

அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இல்லாத காரணத்தினால் சந்திப்பின் பின் இராவிருந்தை தவிர்க்கவும் சிலர் தீர்மானித்திருப்பதாகவே தெரியவருகின்றது.

You May also like