கர்த்தினாலுக்கு பாப்பரசர் அனுப்பிய பரபரப்பு கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் நீதியை கோரும் முயற்சிகளுக்குத் தமது முழு ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும் என்று பாப்பரசர் தெரிவித்துள்ளார் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலுக்கு சர்வதேசத்திடம் நீதி கோருவது பற்றி பேராயர் கர்தினால் ஆண்டகை அண்மையில் பாப்பரசருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்திற்கு பதில் வழங்கிய போது பாப்பரசர் மேற்படி கூறியுள்ளார் என்று கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நீதிக்கான அவுஸ்திரேலிய அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

You May also like