கொரோனா தடுப்பூசி அட்டையினை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறையின் எதிர்காலம் குறித்து நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் பங்கேற்புடன் அடுத்த வருடம் நாட்டில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் ஊட்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத் துறையைமீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்ட்டார்.